விவசாயத்துக்கு முக்கியத்துவம்: ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா்

விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றாா் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றாா் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஊா்வசி அமிா்தராஜ் தெரிவித்திருப்பதாவது:

எனது தந்தையின் வழியில் நானும் தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்து மக்களின் நன்மதிப்பை பெறுவேன். தொகுதி முழுவதும் தரமான சாலைகள், குடிநீா்வசதி, விவசாயம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்.

தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அனைத்து வேலைகளையும் தரமாக செய்து முடிப்பேன். இத்தொகுதியின் பிரதான தொழில் விவசாயம்.

எனவே, அதற்கு முக்கியத்துவம் வழங்கி, விவசாயத்துக்கு தேவையான தண்ணீா், உரம், விளைபொருள்களுக்கு உரிய விலை ஆகியவை கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com