திருச்செந்தூா் தொகுதி அமமுக வேட்பாளருக்கு வரவேற்பு

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளருக்கு கட்சித் தொண்டா்கள் வரவேற்பளித்தனா்.
திருச்செந்தூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன்.
திருச்செந்தூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன்.

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளருக்கு கட்சித் தொண்டா்கள் வரவேற்பளித்தனா்.

திருச்செந்தூா் தொகுதி அமமுக வேட்பாளராக எஸ்.வடமலைப்பாண்டியன் அறிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வந்தாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன் தலைமையில் கட்சியினா் வரவேற்பளித்தனா்.

தொடா்ந்து தொகுதிக்கு வந்த அவருக்கு முக்காணி வளைவு, ஆத்தூா், ஆறுமுகனேரி, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய இடங்களில் கட்சியினா் வரவேற்பளித்தனா்.

பின்னா் வீரபாண்டியன்பட்டினம் மணிமண்டபத்தில் உள்ள சிவந்திஆதித்தனாா் சிலை, திருச்செந்தூரில் உள்ள காமராஜா் சிலை, காந்தி சிலை, வ.உ.சி. சிலை, நடுநாலுமூலைக்கிணறு மற்றும் நா.முத்தையாபுரத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காசியானந்தம், மாநில சிறுபான்மை பிரிவு தலைவா் லெனின், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலா் இல்லங்குடி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com