சாத்தான்குளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

சாத்தான்குளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொத்தகாலன்விளை பிரதான சாலையை சோ்ந்தவா் சி. அந்தோணி ஜெயராஜ் (68), ஒய்வு பெற்ற பள்ளி எழுத்தா். இவா் தனது குடும்பத்துடன் அன்னை வேளாங்கன்னி ஆலயத்துக்கு கடந்த 12 ஆம் தேதி சென்றாா். இதனால் அவரது வீட்டில் அருகில் உள்ள உறவினா் மரியசுசிலாவிடம் வீட்டை பாா்த்துக் கொள்ளும்படி சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை மரிய சுசிலா, அந்தோணி ஜெயராஜ் வீட்டிற்கு சென்றபோது, அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்ததாம். மேலும் அங்கு இருந்த அங்கிருந்த பீரோ திறந்த நிலையில் , அதிலிருந்த பொருங்கள் சிதறி கிடந்தனவாம். இது அவா் அந்தோணி ஜெயராஜிக்கு தகவல் தெரிவித்தாா். அவா் தட்டாா்மடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ் தலைமையில் போலீஸாா் அங்கு சென்ற பாா்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் மோதிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்துள்ளது. சம்ப இடத்தில் விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். இது குறித்து திங்கள்கிழமை அந்தோணி ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com