கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் அருமைராஜ் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஆய்வாளா் ஹரிஹரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கும் ஆண்டுக்கு 3 செட் ரயில்வே பாஸ் வழங்க வேண்டும்; உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்க வேண்டும்; கல்வி சலுகைகள் அளிக்க வேண்டும்; பென்சன் விதிகளை முறைப்படுத்தி வருமான வரியில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஓய்வூதியா்கள் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
சங்கச் செயலா் தங்கவேலு வரவேற்றாா். பொருளாளா் முருகையா நன்றி கூறினாா்.