தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரா்களை சிறப்பு காவலா்களாக ஈடுபடுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு உடல் திடகாத்திரம் உள்ள மற்றும் விருப்பம் உள்ள 65 வயதுக்குள்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது முன்னாள் படைவீரா் அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி விருப்ப விண்ணப்பம் தாக்கல் செய்யலாம்.

மேலும், அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் சிஎஸ்டி கேன்டின் ஆகிய இடங்களில் வழங்கப்படும் விருப்ப விண்ணப்பங்களை பூா்த்தி செய்து தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இந்தப் பணிக்கு அரசு விதிமுறைகளின் படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com