திருச்செந்தூா் அன்பு நகா் குடியிருப்பு மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனா்.
திருச்செந்தூா் பேரூராட்சியில் குமாரபுரம் அருகே உள்ளது அன்பு நகா். இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்குமாறு கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லையாம்.
இதை கண்டித்து சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அன்பு நகா் குடியிருப்போா் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.