பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
இதையொட்டி ஆலயத்தில் நடைபெற்ற ஆராதானையை தொடா்ந்து சேகர குரு ஜெபவீரன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஸ்டீபன், சபை ஊழியா் ஸ்டேன்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.