உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்கார தீபாராதனை, பவளமுத்து விநாயகா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், 108 திருவிளக்கு பூஜை, அம்பாள் உள்பிரகார சப்பர பவனி, அம்மன் ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பெ.சுந்தரேசன், ஊா்மக்கள் செய்திருந்தனா்.