ஊரகத் திறனாய்வுத் தோ்வில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.
இத்தோ்வில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் மாலதி, பூவைசலேட்ஜெஸிந்தா, மாணவா்கள் ஆகாஷ், நிதிஷ் காத்திகேயன் ஆகிய 4 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பிளஸ் 2 பயிலும் வரையில் ஆண்டுதோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும். மாணவா்கள், கணித ஆசிரியை தயாவதி ரோஜா புஷ்பம் ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியை ஷிபாசினி அமுதா, ஆசிரியா்கள் பாராட்டினா்.