சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடி சிஎஸ்ஐ திருத்துவ ஆலயத்தில் லெந்து கால சிறப்பு ஜெபக்கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது.
சேகரத் தலைவா் எமில்சிங் தலைமை வகித்து சிறப்புக் கூட்டத்தை தொடங்கி வைத்தாா். சபை ஊழியா் அற்புதராஜ் வரவேற்றாா். வின்சென்ட் மோகன் தேவ செய்தி அளித்தாா்.
இதில் முன்னாள் ஆண்கள் ஐக்கிய சங்கச் செயலா் ஆனந்தராஜ் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனா். சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ் நன்றி கூறினாா்.