அதிமுக ஆட்சியின் சாதனைகளால் வெற்றி உறுதி: கடம்பூா் செ.ராஜு பிரசாரம்

அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளால் சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும் வெற்றியைப் பெறும் என்றாா் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.
குமாரபுரத்தில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.
குமாரபுரத்தில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.

அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளால் சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும் வெற்றியைப் பெறும் என்றாா் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.

கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், இந்திர பிரசப்தம் தெரு, குமரேசன் நகா், நாராயணசுவாமி கோயில் தெரு, விநாயகா் தெரு, அம்பேத்கா் நகா், குமாரபுரம், பசும்பொன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனைகள், கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டாா். மேலும், அதிமுகவின் தோ்தல் அறிக்கையை மக்களிடம் விளக்கிக்கூறி, அரசின் சாதனைகளால் அதிமுக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்; அதற்கு மக்கள் உறுதுணையாக இருந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் சீனிராஜ், வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் சுப்புராஜ், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, கயத்தாறு ஒன்றியச் செயலா் வினோபாஜி, நகரச் செயலா் முத்துராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com