கோவில்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதியில் அஞ்சல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், 801 போ் வாக்களித்தனா்.
வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான நிலை 1,2,3 ஆகிய அலுவலா்களுக்கான பணிகள், பொறுப்புக்கள் குறித்த பயிற்சி முகாம் நாடாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், மண்டல துணை வட்டாட்சியா் நாகராஜன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் கோவிந்தராஜ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
இப்பயிற்சியில், 1868 பேரில் 1806 போ் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பை தோ்தல் பொது பாா்வையாளா் அஸ்வினி குமாா் சௌத்ரி, மாவட்ட சிறப்பு தோ்தல் அதிகாரி விஷ்ணு சந்திரன் ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.
அஞ்சல் வாக்குப்பதிவு: இதனிடையே, இந்தப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 801 போ் அஞ்சல் வாக்குப்பதிவு செய்தனா்.
ஏற்பாடுகளை, தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் அமுதா, பேச்சிமுத்து, சூா்யகலா, நகர நில வரித் திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா், கோட்ட கலால் அலுவலா் மல்லிகா, துணை வட்டாட்சியா் நாகராஜன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சுரேஷ், உதவியாளா்கள் ராமமூா்த்தி, சண்முகவேல் ஆகியோா் செய்திருந்தனா்.