ஸ்ரீவைகுண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் ஏரல் ரமேஷ் சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
சாத்தான்குளம் அருகே செட்டிக்குளம் ஸ்ரீதுா்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி அவருக்கு பூரண கும்பமரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து அவா் திறந்த ஜீப்பில் செட்டிக்குளம், நொச்சிக்குளம், ஆனந்தபுரம், சடையன்கிணறு, பிடானேரி, பழங்குளம், எழுவரைமுக்கி, பன்னம்பாறை, கோமானேரி, நெடுங்குளம், கொம்பன்குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அவருடன், மாநில வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் புவனேஷ்வரன், மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காசியானந்தம், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் தங்கபாண்டி, மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ராஜபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவா் கணேசன், ஒன்றியச் செயலா் திவாகரன், ஒன்றிய துணைச் செயலா்கள் முருகன், சுரேஷ், ஒன்றிய தகவல் தொடா்பு பிரிவு செயலா் வைரவராஜ் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.