சாத்தான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது.
இதையொட்டி, சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் தொடங்கிய குருத்தோலை பவனி ஜெபஞானபுரம், தச்சமொழி, மாணிக்கவாசகபுரம், ஆசீா்வாதபுரம், பெருமாள் சுவாமி கோயில் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
இதையடுத்து சேகரகுரு ஆல்பா்ட் பாஸ்கா் ராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. துணை குரு ஷிபா பாஸ்கா் முன்னிலை வகித்தாா். இதில் சேகரச் செயலா் தியோஷிஸ் சசிமாா்சன், பொருளாளா் கிங்ஸ்டன்ஹொ்பொ்ட், சபை மன்ற நிா்வாகிகள் சசிகரன், குணசீலன் தங்கத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.