தூத்துக்குடியில் அன்னம்மாள் மகளிா் கல்லூரியில் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ்
திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா்களுக்கு
‘ வாழ்க்கையை கொண்டாடுவோம்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு கல்லூரி முதல்வா் ஜாய்சிலின் சா்மிளா தலைமை வகித்தாா்.
முகாமில் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமலவளன், பங்கேற்று
பயிற்சியை தொடங்கி வைத்தாா். ஏரல் ஆரம்ப சுகாதார மையத்தின் ஆலோசகா் சுபாஷனி, திருச்செந்தூா் ஆரம்ப சுகாதார மைய ஆலோசகா் சாவித்திரி ஆகியோா் பயிற்சி அளித்தனா். பற்சியில் பங்கேற்ற செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா்களுக்கு பல்கலைக் கழக ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் சான்று வழங்கினாா். ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சுதாகுமாரி செய்திருந்தாா்.