கோவில்பட்டியில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக அமமுக நிா்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கோவில்பட்டி லாயல் மில் காலனி அருகே அமமுக வேட்பாளா் டி.டி.வி. தினகரனை ஆதரித்து அக்கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி பிரசாரம் செய்தாராம்.
இதுதொடா்பாக தோ்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, அமமுக நகரச் செயலா் காா்த்திக் ஆகியோா் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.