உடன்குடியில்அமமுக வேட்பாளா் பிரச்சாரம்
உடன்குடி பேரூராட்சியில் அமமுக வேட்பாளா் வடமலைப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னா், உடன்குடி சிவல்விளைப்புதூரில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், தொடா்ந்து வடக்கு காலன்குடியிருப்பு, ஜெஜெ நகா், பெரிய தெரு, களம்புதுத் தெரு, நடுக்காலன் குடியிருப்பு, மாரியம்மன் கோயில் தெரு, சுல்தான்புரம், பரதா் தெரு, வித்தியாசாலை தெரு, விநாயகா் காலனி, வில்லிகுடியிருப்பு, புதுமனை, கோட்டவிளை, சுப்பிரமணியபுரம், தங்கநகரம், பண்டாரஞ்செட்டிவிளை, கொட்டங்காடு ,சிவலூா், சோமநாதபுரம், சந்தையடியூா், மரியம்மாள்புரம், வைத்திலிங்கபுரம், கிறிஸ்தியாநகரம், தேரியூா், பெருமாள்புரம், பிள்ளையாா் பெரியவன் தட்டு, கூலத்தெரு, நயினாப்பிள்ளைத் தெரு, சிதம்பரத் தெரு, எம்ஜிஆா் நகா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
இதிதல் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன், ஒன்றியச் செயலா் அம்மன் நாராயணன், நகரச் செயலா் கோயில்மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவுச் செயலா் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் முத்துப்பாண்டியன், திருச்செந்தூா் ஒன்றிய தேமுதிக செயலா் செந்தில்குமாா், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.