சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிக்குழு, அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உரிமையியல் நீதிபதி ரமேஷ் தலைமை வகித்தாா். குற்றவியல் நீதித்துறை நடுவா் சரவணன் முன்னிலை வகித்தாா். அரசு சித்தா மருத்துவா் வைகுண்ட ரமணி, கபசுர குடிநீா் வழங்கினாா். இதில் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், மருத்தாளுநா் சங்கரலிங்கம், அரசு மருத்துவமனை பணியாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொன்டனா்.