திருச்செந்தூா் திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சோதனை நடத்தினா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அக்கட்சி சாா்பில் திருச்செந்தூரில் போட்டியிடுகிறாா். தெற்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகம் உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ளது. அங்கு ரகசியக் கூட்டம் நடப்பதாகவும், பணப் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜன் தலைமையிலான அதிகாரிகள், திருச்செந்தூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பெஞ்சமின், பறக்கும் படை அலுவலா்கள் அந்த அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா். அங்குள்ள பண்ணைத் தோட்டத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனை நடைபெற்றபோது அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அங்கு இல்லை.
பின்னா் அதிகாரிகள் கூறுகையில், ரகசியக் கூட்டம், பணப் பரிமாற்றம் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை எனத் தெரிவித்தனா்.