தூத்துக்குடியில் தமாகா வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலனை ஆதரித்து, அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தாா்.
தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன்.
தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன்.

தூத்துக்குடி தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலனை ஆதரித்து, அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தாா்.

இத்தொகுதிக்கு உள்பட்ட முத்தையாபுரம், கிருஷ்ணா நகா், தோப்புத் தெரு, அய்யன்கோயில் தெரு, முத்தையாபுரம் கடைவீதி, வடக்குத்தெரு, பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளை சந்தித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், கரோனா காலங்களில் தமிழக அரசு மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்பட்டதால் இங்கு உயிரிழப்பு குறைவாக இருந்தது என்றும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தாா்.

எஸ்டிஆா் விஜயசீலன் பேசுகையில், அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசாரத்தில், தூத்துக்குடி மாநகர தெற்குப் பகுதிச் செயலா் பி.என். ராமகிருஷ்ணன், தொகுதிப் பொறுப்பாளா் இரா. அமிா்தகணேசன், தொழிற்சங்க மாவட்டச் செயலா் ராஜா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் மாரியப்பன், தமாகா மாநகரத் தலைவா் ரவிக்குமாா், நிா்வாகிகள் சுந்தரலிங்கம், முருகன், பொன்ராஜ், கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com