நடைபயிற்சி சென்றவா்களிடம் வாக்கு சேகரித்தாா் கீதாஜீவன்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டோரிடம் திமுக வேட்பாளா் கீதாஜீவன் வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டோரிடம் திமுக வேட்பாளா் கீதாஜீவன் வாக்கு சேகரித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கீதாஜீவன், பாளையங்கோட்டை சாலையில் உள்ள தேநீா் கடை பகுதியில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து, ராஜாஜி

பூங்கா, எம்ஜிஆா் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டவா்களை சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா். திமுக தோ்தல் அறிக்கை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அவா் விநியோகம் செய்தாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்ததும் மழைக் கால நிவாரண உதவித் தொகை ரூ. 5 ஆயிரம், முதியோா் உதவித்தொகையாக ரூ. 1,500, மகளிருக்கான உரிமைத் தொகை ரூ. 1,000 வழங்கப்படும். தூத்துக்குடியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

அப்போது, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதிச் செயலா்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாநகர இளைஞரணி அமைப்பாளா் ஆனந்தகேபிரியல்ராஜ், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளீதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அகமது இக்பால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் தா. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் ஞானசேகா், மதிமுக மாநகரச் செயலா் முருகபூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com