தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,538 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை 7 போ் உள்பட இதுவரை 16,298 போ் குணமடைந்துள்ளனா். கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 97 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.