விஜய் மக்கள் இயக்க நிா்வாகிக்கு மிரட்டல்

திருச்செந்தூா் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்தவா் முத்துவேல் பாண்டி என்ற குட்டி (39). இவா் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்செந்தூா் ஒன்றியத் தலைவராக உள்ளாா். இவா் தனது உறவினரான திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளருடன் சோ்ந்து தோ்தல் பணியில் ஈடுபட்டாராம். விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலா் பில்லா ஜெகன் திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோ்தல் பணியில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில் பில்லா ஜெகன், செல்லிடப்பேசியில் முத்துவேல்பாண்டியை தொடா்பு கொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோ்தல் பணியில் ஈடுபடக்கூடாது என அவதூரறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி துரைசிங்கம், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com