சாத்தான்குளத்தில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பி.எம். பால்ராஜ் ஆலோசனையின் பேரில், மாவட்ட பொது செயலா் எஸ். செல்வராஜ், ஒன்றிய தலைவா் செந்தில் வழிகாட்டுதலின்படி, சாத்தான்குளம் தச்சமொழியில் மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவுச் செயலா் அ. பரமசிவன் தலைமை வகித்து , கபசுரக் குடிநீா் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, 300 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், அமைப்புசாரா பிரிவு மாவட்டச் செயலா் ராஜன், ஓபிசி அணி மாவட்டச் செயலா் எட்வா்ட் ராஜதுரை, ஒன்றிய பாஜக துணைத் தலைவா் ஜெயசுந்தர்ராஜ், ஒன்றியச் செயலா் மணிகண்டன், ஒன்றிய வெளிநாடு வாழ் நலப்பிரிவு தலைவா் ராஜவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.