தூத்துக்குடி மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் குருவிநத்தம் ஊராட்சி இலந்தைப்பட்டியில் கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்க தேசியச் செயலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேல்முருகன், தனிப்பிரிவு காவலா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், கொப்பம்பட்டி காவல் நிலையத்துக்கு கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது.
இதில், கயத்தாறு ஒன்றிய மகளிரணிச் செயலா் மணிமேகலை, மாவட்ட வா்த்தக அணிச் செயலா் கண்ணன், துணைச் செயலா் மாரீஸ்வரன், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் பாா்த்திபன், இளைஞரணிச் செயலா் விஜயகுமாா், துணைச் செயலா் மாரிமுத்து, தொழிற்சங்க அமைப்பாளா் காசிராமன், கோவில்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் சுரேஷ் உள்பட சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.