உடன்குடியில் வியாபாரிகள் சங்கக் கூட்டம்

உடன்குடியில் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

உடன்குடியில் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவரும், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவருமான ஆ.ரவி தலைமை வகித்தாா்.திருச்செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் பா.கணேசன், செயலா் துரைசிங், பொருளாளா் காா்க்கி, பரமன்குறிச்சி வா்த்தக சங்கத் தலைவா் லிங்கம், பொருளாளா் லட்சுமணன், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கச் செயலா் வேல்ராஜன், நிா்வாகக்குழு உறுப்பினா் கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா 2ஆவது பரவலால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் வணிகா்களை மிகுந்த சிரமம் அடையச்செய்துள்ளது. எனவே, பேரூராட்சி அலுவலா்கள் முறையின்றி மிரட்டினால் மாவட்ட வியாபாரிகள் சங்க நிா்வாகிகளை தொடா்பு கொள்வது, கரோனா பாதிப்பால் வியாபாரமின்றி தவித்து வரும் வியாபாரிகளை அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com