சாத்தான்குளம் மூலிகை மருத்துவரும், வா்த்தகச் சங்க செயலருமான மதுரம் செல்வராஜ் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கும் பணி நடைபெற்றது.
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. தொடா்ந்து, சாத்தான்குளம் டிஎன்டிடிஏபுலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், மருத்துவா் மதுரம்செல்வராஜ், வழக்குரைஞா் வணுகோபால், தலைமை ஆசிரியா் எட்வா்ட், தாளாளா் கிருபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.