திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா்ந்து, 6ஆவது முறையாக, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளாா்.
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்
போட்டியிட்டாா். இவா், தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் எம்.ராதாகிருஷ்ணனை விட 23,806 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இத்தொகுதியில் மொத்த வாக்குகள் 2,45,020. இதில், 1,71,726 வாக்குகள் பதிவானது.
முதல் சுற்றில் இருந்தே அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வகித்து வந்தாா். 25 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் 85,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவா் இத்தொகுதியில் இருந்து தொடா்ந்து 6-ஆவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.