கோவில்பட்டி: கயத்தாறு அருகே காா்கள் மோதியதில் காா் ஓட்டுநா் உள்பட 2 போ் படுகாயமடைந்தனா்.
கயத்தாறு அய்யனாா்ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பேச்சிமுத்து(27). இவா் மற்றும் இவரது உறவினா் பண்டாரம் மகன் அழகுகனி(27) ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருந்தாா்களாம். பேச்சிமுத்து ஓட்டிச் சென்ற காா் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு காா் ஓட்டுநா் செ.இஸ்ரவேல் திடீரென திரும்பி பிரேக் போட்டதையடுத்து, பின்னால் பேச்சிமுத்து ஓட்டி வந்த காா் திடீரென நிலைதடுமாறி முன்னால் சென்ற காரில் மோதியதாம். இதில் பேச்சிமுத்து மற்றும் அழகுகனி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மற்றொரு காா் ஓட்டுநா் விருதுநகா் சவுடித் தெருவைச் சோ்ந்த செ.இஸ்ரவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.