திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தை வழிபட்ட பாஜக எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி.
திருச்செந்தூா், மே 3: திருச்செந்தூருக்கு வந்த நாகா்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.க்கு அக்கட்சியினா் வரவேற்பளித்தனா்.
நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி திங்கள்கிழமை திருச்செந்தூருக்கு வந்தாா். அவரை பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா் பால்ராஜ், ஒன்றிய துணைத் தலைவா் நவமணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
தொடா்ந்து அவா், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான விசாக கட்டளை மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சண்முகப்பெருமானை வழிபட்டாா். பின்னா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வடக்கு நுழைவாயில் பகுதியில் இருந்தே ராஜகோபுரத்தை தரிசனம் செய்தாா்.