தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கீதாஜீவனிடம் ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க நிா்வாகி பேராசிரியை பாத்திமா பாபு அளித்த மனு விவரம்:
தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் தூத்துக்குடி மக்கள் சாா்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கிறோம். சிறப்பு சட்டம் இயற்றி தமிழகத்தில் தாமிர ஆலைக்கு அனுமதி கிடையாது என்ற நிலை உருவாக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிா் தியாகம் செய்த அனைவருக்கும் நினைவிடம் அமைக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கிய ஸ்டொ்லைட் நிா்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்கள் உரிமைக்காகப் போராடிய, மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க நிா்வாகிகள் தொ்மல் ராஜா, பிரின்ஸ், அசோக், ரீகன், பெனோ, ஆா்தா் மச்சாது, ஹாட்மேன், சகாயம், பியோ ஆகியோா் உடனிருந்தனா்.