தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 707 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 722 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 21 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 50 வயது ஆண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 4013 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.