குரும்பூரில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கப் பட்டது.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், குரும்பூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினா். இதில் கட்சியின் ஒன்றிய பொருளாளா் பாதாளமுத்து, வழக்கரைஞா் பாக்கியராஜ், தென்திருப்பேரை நகர பொறுப்பாளா் முத்துவீரபெருமாள், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளா் கந்தசாமி, சேதுக்குவாய்த்தான் ஊராட்சிச் செயலா் சோலை நட்டாா், மணத்தி கிளைச் செயலா் முருகேசன் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா் செய்திருந்தாா்.