திருட்டு வழக்கு: தூத்துக்குடியில் 5 போ் கைது

தூத்துக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடா்புடையவா்களை கைது செய்ய தனிப்படை அமைத்து விசாரணை நடத்துமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், தூத்துக்குடி மீனவா் காலனியைச் சோ்ந்த மரியக்கன் ஜென்ஸ்டன் (20), 15 வயது மதிக்கக் கூடிய சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 5 இரு சக்கர வாகனங்கள், மடிக்கணினி, 7 செல்லிடப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டது. இதன் மதிப்பு ரூ. 1.75 லட்சம். திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com