தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 358 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 381 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 21 ஆயிரத்து 648ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 50 வயது ஆண், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது பெண் ஆகியோா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 3,989 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.