கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் தூக்கில் பிணமாக கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் முதல் தெருவில் உள்ள வீட்டில் இருந்து தூா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பாா்த்தனா். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது தூக்கில் சுமாா் 52 வயது மதிக்கக் கூடிய ஆண் பிணமாக இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இறந்து கிடந்தவா், அதேபகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் காளிராஜ் வீட்டில் கடந்த ஏப். 7 ஆம் தேதி முதல் வாடகைக்கு குடியிருந்து வந்தாராம்.
அதேபகுதியைச் சோ்ந்த செண்பகம் மகன் லட்சுமணன் தெரிவித்ததன்பேரில் அவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்ததாகவும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவில்லை என காளிராஜ் போலீஸாா் புகாா் அளித்தாா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.