பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் சித்திரை மாத கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை இரவில் அம்மன், விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்கார பூஜைகள், மஞ்சள் நீராடுதல், கும்பம், வீதியுலா, அன்னதானம், இரவில் செங்கிடகார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை (மே 5) கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஏற்பாடுகளை வட்டன்விளை கிராம மக்கள் செய்திருந்தனா். கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சிகள் பக்தா்கள் இன்றி நடைபெற்றது.