சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்ட அலுவலகத்தில், பொதுமுடக்கத்தின்போது வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வருவாய்த் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். கரோனா விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், பால் ஆபிரகாம், மந்திரராஜன், சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், ஒன்றிய பாஜக தலைவா் செந்தில், பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சித்தரங்கதன், அரிமா சங்க முன்னாள் தலைவா் ஜெயபிரகாஷ், சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், ஜெயபால், வருவாய் ஆய்வாளா் இசக்கியம்மாள், மஞ்சரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.