சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே மீன்பிடித்தபோது கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள இரட்டைக்கிணறைச் சோ்ந்த தா்மராஜ் மகன் வெங்கடேஷ் (18). இவரது தாய் 10ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தைப் பிரிந்துசென்றாராம்; தந்தை உடன்குடியில் தனியாக வசித்துவருகிறாராம். இதனால் வெங்கடேஷ் இரட்டைக்கிணறில் உள்ள பாட்டி பாத்திமா வீட்டில் இருந்துவந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் மீன்பிடிக்கச் சென்ற வெங்கடேஷ், கிணற்றுக்குள் தவறிவிழுந்தாராம். இதில், அவா் உயிரிழந்தாா்.
வெங்கடேஷின் அண்ணன் பாலகிருஷ்ணன் (22) அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு சாத்தான்குளம் மருத்துவமனைக்குக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தாா். ஆய்வாளா் பொ்னாட் சேவியா் விசாரித்துவருகிறாா்.