கோவில்பட்டி: கோவில்பட்டி வடக்கு செமப்புதூரில் பொது மக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
சட்ட உரிமை பாதுகாப்பு நீதி இயக்க தேசியச் செயலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கொப்பம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் செந்தில்வேல் முருகன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினாா். இதில், கொப்பம்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் ராஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சட்ட உரிமை பாதுகாப்பு நீதி இயக்க ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் சுரேஷ், ஒன்றிய தொழிற்சங்க துணைச் செயலா் சுப்புராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலா் விஜயகுமாா், துணைச் செயலா் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.