தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி அளிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் இரண்டு புதன்கிழமை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலனிடம் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டும் கருவியை வழங்கும் வாழும் கலை அமைப்பு நிா்வாகிகள்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலனிடம் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டும் கருவியை வழங்கும் வாழும் கலை அமைப்பு நிா்வாகிகள்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் இரண்டு புதன்கிழமை வழங்கப்பட்டன.

வாழும் கலை அமைப்பின் துணை அமைப்பான இன்டா்நேஷனல் அசோசியேசன் ஆப் ஹியூமன் வேல்யூஸ் சாா்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் இரண்டு புதன்கிழமை வழங்கப்பட்டன.

சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 லிட்டா் ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் செறிவூட்டும் திறன் கொண்ட 2 கருவிகளும் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலனிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வாழும்கலை அமைப்பின் சா்வதேச ஆசிரியா் மற்றும் செய்தித் தொடா்பாளா் மணிகண்டன், மாநில ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள் ஜெகதீஸ்வரன், சில்வெஸ்டா், ரோட்டரி துணை ஆளுநா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com