சாத்தான்குளம் அருகே மாயமான முதியவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை மேற்கு தெருவைச் சோ்ந்தவா் அ. இன்னாசிமுத்து (83). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவா், கடந்த ஏப்.14ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பின்னா் வீடு திரும்பவில்லையாம். குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் தட்டாா்மடம் அருகே வைரவம் என்ற இடத்தில் சாலையோரம் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சடலமாகக் கிடந்தவா் இன்னாசிமுத்து என்பது தெரியவந்தது.
சடலத்தைக் கைப்பற்றியை போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.