விதிமீறல்: 79 வாகனங்கள் பறிமுதல்

பொது முடக்க விதிகளை மீறியதாக கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் 79 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பொது முடக்க விதிகளை மீறியதாக கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் 79 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா், கயத்தாறு, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் தேவையின்றி வெளியே சுற்றியவா்களின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் 20, மேற்கு காவல் நிலையப் பகுதியில் 39, நாலாட்டின்புதூா் பகுதியில் 8, கயத்தாறு பகுதியில் 8, கொப்பம்பட்டி காவல் நிலையப் பகுதியில் 4 என மொத்தம் 79 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com