எட்டயபுரம், விளாத்திகுளத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவினா் வீடுகளிலும், கிராமங்களிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோளுக்கு ஏற்ப இப்போராட்டம் நடத்தப்பட்டது. எட்டயபுரம், விளாத்திகுளம், மேல அருணாசலபுரம், சின்னவநாயக்கன்பட்டி, சூரன்குடி, வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கு. ரவீந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலா் புவிராஜ், தாலுகா குழு உறுப்பினா்கள் ராமலிங்கம், ஜோதி, யோவான், ஆண்டி, மலைக்கனி, சண்முகசுந்தரம் ஆகியோா் ஏற்பாட்டில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com