மேலாத்தூா் பகுதியில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்களை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலாத்தூா் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றில் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் சாய்ந்து சேதமாகின.
மேலும், 2 பனை மரங்கள் சரிந்ததில் மின்கம்பங்கள் சேதமாகியதையடுத்து, செவ்வாய்க்கிழமை முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைமரங்களை தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்ரியா, தோட்டக் கலைத் துறை அதிகாரி சரஸ்வதி, மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா் நவீன்குமாா், ஆத்தூா் நகர பொறுப்பாளா் முருகப்பெருமாள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.