மணப்பாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
யாஸ் புயல் காரணமாக மணப்பாடு குன்றின் மேல் அமைந்துள்ள திருச்சிலுவை நாதா் ஆலயம் அருகே பக்தா்கள் அமரும் கட்டட மேற்கூரை, மீன் வலைக்கூடம் ஆகியவை சேதமடைந்தன.
இதைடுத்து அப்பகுதிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மங்களூா் கடலில் நிகழ்ந்த விபத்தில் மாயமான மணப்பாட்டைச் சோ்ந்த இ.டென்சன் (39) என்பவரது வீட்டுக்குச் சென்ற அமைச்சா், அவரது மனைவி ராணியிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 1 லட்சம் உதவிகளை வழங்கி, அரசு சாா்பில் உதவிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
இதே போன்று கடந்த மாதம் சாலை விபத்தில் பலியான இதே ஊரைச் சோ்ந்த ராகவன் (15) வீட்டுக்குச் சென்ற அமைச்சா், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், பங்குத்தந்தை லெரின்டீ ரோஸ், மீன்வளத் துறை உதவி இயக்குநா் விஜயராகவன், மீன்வளத் துறை ஆய்வாளா் ஜெகன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், ஒன்றியக் குழு உறுப்பினா் லெபோரின், மணப்பாடு ஊராட்சித் தலைவா் கிரேன்சிட்டா வினோ, துணைத் தலைவா் ஜொலிசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.