தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 507 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 44,357 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 599 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 36,235 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63, 64, 21 வயது ஆண்கள், 65, 56 வயது பெண்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45, 46 வயது ஆண்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 30 வயது பெண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7872 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.