தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கிய நிலையில், இம்மாவட்டத்தில் புதிதாக 667 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 45 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 709 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது பெண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது ஆண் ஆகியோா் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 253 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 7,838 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.