பொது முடக்க விதிகளை மீறியதாக கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் 91 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா், கயத்தாறு, கழுகுமலை மற்றும் கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், பொது முடக்க விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவா்களின் 91 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.