மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் நியமனம் செய்ய வேண்டும்; தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதுடன் மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செந்தூா் ஒன்றியக் கிளை சாா்பில் மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

கட்சியின் மாவட்டச் செயலா் கே.எஸ்.அா்ஜுனன், மாவட்டக்குழு உறுப்பினா் சு.பன்னீா்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினா்கள் பெ.கணேசன், சிவதாணுதாஸ், சந்திரசேகா் கலைச்செல்வி, கிளை செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com